இடம் விட்டு இடம்

எதிவர்வரும் 26.12.2009 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜலான்புசார் சமூகமன்றத்தில் நடைபெறும் மாதந்திரn கவிமாலைக் கவிஞர்களின் சந்திப்பில் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

போட்டிக்கவிதை தலைப்பு: இடம் விட்டு இடம்

படித்த பிடித்த கவிதைகளை வாசிக்கும் அங்கத்துடன்

கவிஞர் ந.வீ.விசயபாரதி நடத்தும் யாப்பிலக்கண வகுப்பும் நடைபெறும்.

மேலதிக தொடர்பிற்கு

மா.அன்பழகன் 90053043

எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் கலந்துகொள்ளும் கவிமாலை

எதிர்வரும் சனிக்கிழமை  28.11.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்றத்தில் (சிங்கப்பூர்)  நடைபெறும் மாதந்திர கவிமாலை நிகழ்ச்சியின் போட்டிக் கவிதைக்கான தலைப்பு ” தொலைந்த நாட்கள்”  தேர்வு செய்யப்படும் முதல் 6 கவிதைகளுக்கு  ரொக்கப் பரிசும் புத்தகப் பரிசும் வழங்கப்படும். நிகழ்வில் மரபுக்கவிதை எழுதுவது எப்படி என்று இலக்கண வகுப்பு நடத்தப்படும்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் பின்நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அவர்கள் கலந்துகொள்கிறார்.

இவற்றுடன் படித்த பிடித்த கவிதைகளை வாசிக்கும் அங்கமும் இடம்பெறும்.

நிகழ்ச்சி நெறியாளர் : கவிஞர் பனசை நடராஜன்

அனுமதி  இலவசம் . அனைவரும் வருக.  புதிய நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

மேலதிக தொடர்புக்கு

மா.அன்பழகன்

90053043

ந.வீ.விசயபாரதி

82453150

31.10.2009 – போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை”

31.10.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஜலான் புசார் சமூகமன்றத்தில் நடைபெறும் மாதாந்திர கடற்கரைச் சாலை கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு கடற்கரை . போட்டிக்கவிதையில் தேர்ந்தெடுக்கப்படும் 6 கவிதைகளுக்கு பரிசளிக்கப்படும்.

 

நிகழ்வில் 2009 சிறுகதைக்கான ”தங்கமுனை” விருதுபெற்ற எழுத்தாளர்கள் திருமதி.இன்பா,  திருமதி.மீரா மன்சூர்,  கவிதைக்கான ”தங்கமுனை” விருது பெற்ற கவிஞர்கள் திரு.கோ.இளங்கோ, திரு.நீதிப்பாண்டி ஆகியோர்  பாராட்டி கௌரவிக்கபடவிருக்கின்றனர். 

2009 முன்மாதிரி அன்னைக்கான அதிபர் விருது பெற்ற திருமதி.தவமணி அவர்களும் பாராட்டி கௌரவிக்கபடவிருக்கிறனர்.

 

வழக்கம் போல வடித்த, படித்த, பிடித்த கவிதைகள் வாசிப்பு அங்கமும் சிறப்புரையும் இடம்பெறும்.

 

அனைவரும் வருக அனுமதி இலவசம்..

 

அன்புடன் அழைப்பது

 

புதுமைத்தேனீ மா.அன்பழகன் மற்றும் கவிமாலைக்கவிஞர்கள்

 

 

மேலதிக தொடர்புக்கு: மா.அன்பழகன்

90053043

கவிதைத் திருவிழா

132712

29.08.09 ஜாலான்புசார் சமூகமன்றத்தில் – “மனிதநேயம்“

எதிர்வரும் சனிக்கிழமை 29.08.09 அன்று மாலை 6.30மணிக்கு லாவண்டர் எம்.ஆர்.டி அருகே உள்ள ஜாலான்புசார் சமூகமன்றத்தில், ஜாலான்புசார் இந்திய நற்பணிச் செயற்குழு ஆதரவுடன் நடைபெறும் கவிமாலை நிகழ்விற்கான போட்டிக்கவிதை தலைப்பு

மனிதநேயம்“

வழக்கம் போல படித்த, பிடித்த கவிதைகளை வாசிக்கும் அங்கமும், சிறப்புரையும் இடம் பெறும்.

அனுமதி இலவசம்

மேலதிக தொடர்புக்கு

மா.அன்பழகன் 90053043

ந.வீ.விசயபாரதி 97526214

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க உங்களை

அன்புடன் அழைப்பது

புதுமைத்தேனி மா.அன்பழகன்

கவிமாலை விருது விழா – 2009

களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம்
                விக்டோரியா ஸ்ட்ரீட்
                சிங்கப்பூர்
 
காலம்: 27.09.2009  ஞாயிறு மாலை 6 மணி முதல்
 

pixshanmugam 
சிறப்பு விருந்தினர்
சட்ட அமைச்சர் திரு.சண்முகம் அவர்கள்
 
 
சிறப்புரை
தமிழ்த்திரைப் பட இயக்குனர் திரு.சேரன் அவர்கள்
 Cheran_1

♪ சிங்கப்பூரின் பட்டறிவு மிக்க படைப்பாளிக்கு
கவிமாலை “கணையாழி இலக்கிய விருதளிப்பு”
(நிதி ஆதரவு திரு.எம்.ஏ.முஸ்தபா அவர்கள்)
 
♪  ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கு 
“ஐந்து பவுன் தங்க பதக்க விருதளிப்பு”
(நிதி ஆதரவு தமிழத் தொண்டர் திரு.நாகை தங்கராசு அவர்கள்)
 
♪  கவிமாலைக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு
”பொன்மாலைப் பூக்கள்”  நூல் வெளியீடு
(நிதி ஆதரவு அருளாளர் திரு ஆறுமுகம் செட்டியார் அவர்கள்)
 
மற்றும் இனிய இலக்கிய நிகழ்வுகளுடன்
உங்கள் சிந்தனைக்கு விருந்தாக
கவிமாலை  விருது விழா
 
அனைவரையும் அன்புடன் அழைக்கும்
கவிமாலைக் கவிஞர்கள்
ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
சிங்கப்பூர்

“தங்க முத்திரை” விருதினை பெற வாருங்கள் கவிமாலைக்கு

25.07.09 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜலான் புசார் சமூக மன்ற கீழ் தளத்தில் மாதந்திர கவிமாலை நடைபெறுகிறது.   இந்த மாத போட்டிக்கவிதைக்கான தலைப்பு நெருப்பில் தெரியும் நிலவு முகம்”

 

வழக்கம் போல பிடித்த, படித்த, வடித்த கவிதைகள் வாசிக்கும் அங்கமும்,  சிறப்புரையும் இடம் பெறும்.

 

அனுமதி இலவசம், அனைவரும் வருக

 

ஒவ்வொருரும் உங்களின் புதிய நண்பர்களை அழைத்து வாருங்கள். கவிமாலையை, கவிமாலை கவிஞர்களை அறிமுகப்படுத்துங்கள்.

 

இந்த மாதம் முதல் போட்டிக்கவிதைகளின் சிறந்த கவிதைகளை தேர்வுக்குழுவினர் சேகரிக்கவிருக்கின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இந்த சிறந்த கவிதை தேர்வு நடைபெறும். அடுத்த ஆண்டு கணையாழி விருது விழாவில், ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கவிதையில் இருந்து ஆகச்சிறந்த ஒரு கவிதையை தங்க முத்திரை” கவிதையாக தேர்வு செய்து வெள்ளி 250மதிப்புள்ள தங்க நாணயம் வழங்கப்படவிருக்கிறது.

 

மேலதிக விபரங்களுக்கு

 

மா.அன்பழகன்: 90053043

ந.வீ.விசயபாரதி: 97526214

 

அன்புடன் அனைவரையும்

இன்முகத்துடன் அழைப்பது

புதுமைத்தேனீ மா.அன்பழகன்

 

மற்றும்

கவிமாலைக் கவிஞர்கள்

இருள் தந்த ஞானம்

எதிர்வரும் சனிக்கிழமை 27.06.09 அன்று மாலை 6.30மணிக்கு லாவண்டர் எம்.ஆர்.டி அருகே உள்ள ஜாலான்புசார் சமூகமன்றத்தில், ஜாலான்புசார் இந்திய நற்பணிச் செயற்குழு ஆதரவுடன் நடைபெறும் கவிமாலை நிகழ்விற்கான போட்டிக்கவிதை தலைப்பு “இருள் தந்த ஞானம்“ அல்லது “இருள் தந்த வெளிச்சம்“.

 

வழக்கம் போல படித்த, பிடித்த கவிதைகளை வாசிக்கும் அங்கமும், சிறப்புரையும் இடம் பெறும்.

அனுமதி இலவசம்

மேலதிக தொடர்புக்கு

மா.அன்பழகன் 90053043

ந.வீ.விசயபாரதி 97526214

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க உங்களை அன்புடன் அழைப்பது புதுமைத்தேனி மா.அன்பழகன்

மே – 2009 கவிமாலை நிகழ்வில் பரிசுபெற்ற கவிதைகள்

போட்டி கவிதைக்கான தலைப்பு “நிழல் தேடும் சூரியன்”

முன்மை பரிசு பெற்ற கவிஞர்கள் –  சி.கருணாகரசு,  பீஷான் கலா,  தியாக.ரமேஷ்.

இரண்டாம் நிலை பரிசு பெற்ற கவிஞர்கள் – புவனேஸ்வரி , வள்ளியம்மை சுப்ரமணியம் , பாலமுருகன்

 DSC04005

( போட்டிக்கவிதையில் முதன்மை பரிசு பெற்ற சி.கருணாகரசுவிற்கு  – ஓய்புபெற்ற பேராசிரியர் திரு.இராஜேந்திரன் பரிசளிக்கிறார்)  

 சி.கருணாகரசு

இரண்டாம் தரமென ஒதுக்கி

உரிமைகள் மறுத்து

அடக்கியாண்டு

அடிமையாய் பாவிக்கப்பட்ட

இனத்தின்…

உறங்கிக் கொண்டிருந்த

சூரிய செல்கள்

விழித்து

வெடித்து

எரிமலையின் சீற்றத்தோடு

வெப்பம் கக்கி

வெற்றி பாதையில்

விடியலை எட்டும் தருவாயில்

உலகின்

ஆதிக்க சக்திகளும்

ஆயத வியாபாரிகளும்

கைகோர்த்து செய்த

கலகத்தால்…

அந்த…

சூரிய சக்திகள்

நிழல் தேடுகின்றன

தற்காலிகமாய்!

DSC04009

( போட்டிக்கவிதையில்  இரண்டாம் நிலை பரிசு பெற்றவரும் அன்றைய கவிமாலை நிகழ்வில் அன்னையர் தினத்திற்காக கவுரவிக்கப்பட்ட அம்மா திருவாட்டி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள்)

பீஷான் கலா

 

நண்பகல் சூரியனாய்

சுட்டெரித்த என் கதிர்வீச்சால் – நிலவே

கருகிய உன் மனமறியாமலும்

 

உணர்ச்சியற்ற மரமாய் – வாழ்க்கை

இருந்த பொழுதும் ஒளி கொடுத்து

நிழல்வர உதவாமலும்…

 

என் இளமைச் செருக்கும்

ஈகோவும் இரு துருவங்கள்

ஆக்கியது நம் வாழ்வை

 

காலம் கடந்து தள்ளாடும் வயதில்

புதையுண்ட நம் வாழ்வை

அகழ்வாராய்ச்சி செய்ய…

தொல்பொருளாய்

அன்பு பொறுமை புரிந்துணர்வு

இன்னும் பல…

மேலெழுந்து வந்து

என்னை வதைக்க…

 

அஸ்தமிக்கும் நேரம்

இளமையும் ஈகோவும் இல்லாமல்

இதயமும் இமையும் கசிய

இல்லகிழத்தியாளின்

நிழல் தேடும் சூரியனாய்.

 

(இல்லகிழத்தியாள் – மனையாள்)

DSC04007

( போட்டிக்கவிதையில் முதன்மை பரிசு பெற்ற தியாக.ரமேஷ் – ஓய்புபெற்ற கவிஞர் க.து.மு.இக்பால் பரிசளிக்கிறார்) 

தியாக.ரமேஷ்

 

கார்பன் டை ஆக்சைடு

இரசாயனப் புகை

தரை கடல் ஆகாய ஊர்திகளின் வாயு

காடுகள் அழிப்பு

என இப்படியே போனால்

எல்லாம் தொலைந்து போகும்

தன் வெப்பம் தாளாமல்

சூரியனும் நிழல் தேடும்…

 

மயிரு போனால் போகிறது

இரசாயன கொத்து குண்டுகளால்

ஒரு இனமே கொத்து கொத்தாய்

உயிர் போவது கூட உணராமல் மடியும்போது

எதுவுமற்று அலையும் போது

மயிரு போனால் போகிறது

 

கருத்த தமிழனின்

வெண் விடியலுக்கு வித்திட்ட

ஆதவன் அஸ்தமனம் ஆனதாக

அசத்தல் நடிப்பு நடிக்கும் அரசன்

பகடு செய்யம் படைகள்

இறந்த்தாக இனம் காட்டும் கருணாக்கை

கொண்டாடும் தண்டுவடமில்லா வடக்கு

சூரிய சின்னம் கைக்குள் அடக்கம்

உடன்பிறப்புகள் சவக்குழியில் அடக்கம்…

 

நிழலுக்கு ஒதுங்கிய சூரியன்

மீண்டும் முளைக்கும் என்ற

உண்மையான நம்பிக்கையுடன்

நான் நீ நாம்.

 DSC04008

( போட்டிக்கவிதையில் இரண்டாம் நிலை பரிசு பெற்ற பாலமுருகனுக்கு – புதுமைத்தேனீ மா.அன்பழகன் பரிசளிக்கிறார்)

நுழைவுப் படிவம் – சிங்கப்பூர் (கவிதை) தங்கப்பதக்கவிருது

p3சிங்கப்பூர் கவிமாலை தங்கப்பதக்க விருதுக்கான  நுழைவுப்படிவத்தினை இந்த வலைப்பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பிரதியெடுத்து அதனை பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

 

p1

 

மேலதிக தொடர்புக்குகவிஞர் மா.அன்பழகன் அவர்களை 90053043 என்ற எண்ணிலும் கவிஞர் ந.வீ.விசயபாரதி 97526214 என்ற எண்ணிலும் அழைத்து பெற்றுக்கொள்ளவும். அன்புடன் மா.அன்பழகன்

 

p2