போட்டி கவிதைக்கான தலைப்பு “நிழல் தேடும் சூரியன்”
முன்மை பரிசு பெற்ற கவிஞர்கள் – சி.கருணாகரசு, பீஷான் கலா, தியாக.ரமேஷ்.
இரண்டாம் நிலை பரிசு பெற்ற கவிஞர்கள் – புவனேஸ்வரி , வள்ளியம்மை சுப்ரமணியம் , பாலமுருகன்

( போட்டிக்கவிதையில் முதன்மை பரிசு பெற்ற சி.கருணாகரசுவிற்கு – ஓய்புபெற்ற பேராசிரியர் திரு.இராஜேந்திரன் பரிசளிக்கிறார்)
சி.கருணாகரசு
இரண்டாம் தரமென ஒதுக்கி
உரிமைகள் மறுத்து
அடக்கியாண்டு
அடிமையாய் பாவிக்கப்பட்ட
இனத்தின்…
உறங்கிக் கொண்டிருந்த
சூரிய செல்கள்
விழித்து
வெடித்து
எரிமலையின் சீற்றத்தோடு
வெப்பம் கக்கி
வெற்றி பாதையில்
விடியலை எட்டும் தருவாயில்
உலகின்
ஆதிக்க சக்திகளும்
ஆயத வியாபாரிகளும்
கைகோர்த்து செய்த
கலகத்தால்…
அந்த…
சூரிய சக்திகள்
நிழல் தேடுகின்றன
தற்காலிகமாய்!

( போட்டிக்கவிதையில் இரண்டாம் நிலை பரிசு பெற்றவரும் அன்றைய கவிமாலை நிகழ்வில் அன்னையர் தினத்திற்காக கவுரவிக்கப்பட்ட அம்மா திருவாட்டி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள்)
பீஷான் கலா
நண்பகல் சூரியனாய்
சுட்டெரித்த என் கதிர்வீச்சால் – நிலவே
கருகிய உன் மனமறியாமலும்
உணர்ச்சியற்ற மரமாய் – வாழ்க்கை
இருந்த பொழுதும் ஒளி கொடுத்து
நிழல்வர உதவாமலும்…
என் இளமைச் செருக்கும்
ஈகோவும் இரு துருவங்கள்
ஆக்கியது நம் வாழ்வை
காலம் கடந்து தள்ளாடும் வயதில்
புதையுண்ட நம் வாழ்வை
அகழ்வாராய்ச்சி செய்ய…
தொல்பொருளாய்
அன்பு பொறுமை புரிந்துணர்வு
இன்னும் பல…
மேலெழுந்து வந்து
என்னை வதைக்க…
அஸ்தமிக்கும் நேரம்
இளமையும் ஈகோவும் இல்லாமல்
இதயமும் இமையும் கசிய
இல்லகிழத்தியாளின்
நிழல் தேடும் சூரியனாய்.
(இல்லகிழத்தியாள் – மனையாள்)

( போட்டிக்கவிதையில் முதன்மை பரிசு பெற்ற தியாக.ரமேஷ் – ஓய்புபெற்ற கவிஞர் க.து.மு.இக்பால் பரிசளிக்கிறார்)
தியாக.ரமேஷ்
கார்பன் டை ஆக்சைடு
இரசாயனப் புகை
தரை கடல் ஆகாய ஊர்திகளின் வாயு
காடுகள் அழிப்பு
என இப்படியே போனால்
எல்லாம் தொலைந்து போகும்
தன் வெப்பம் தாளாமல்
சூரியனும் நிழல் தேடும்…
மயிரு போனால் போகிறது
இரசாயன கொத்து குண்டுகளால்
ஒரு இனமே கொத்து கொத்தாய்
உயிர் போவது கூட உணராமல் மடியும்போது
எதுவுமற்று அலையும் போது
மயிரு போனால் போகிறது
கருத்த தமிழனின்
வெண் விடியலுக்கு வித்திட்ட
ஆதவன் அஸ்தமனம் ஆனதாக
அசத்தல் நடிப்பு நடிக்கும் அரசன்
பகடு செய்யம் படைகள்
இறந்த்தாக இனம் காட்டும் கருணாக்கை
கொண்டாடும் தண்டுவடமில்லா வடக்கு
சூரிய சின்னம் கைக்குள் அடக்கம்
உடன்பிறப்புகள் சவக்குழியில் அடக்கம்…
நிழலுக்கு ஒதுங்கிய சூரியன்
மீண்டும் முளைக்கும் என்ற
உண்மையான நம்பிக்கையுடன்
நான் நீ நாம்.

( போட்டிக்கவிதையில் இரண்டாம் நிலை பரிசு பெற்ற பாலமுருகனுக்கு – புதுமைத்தேனீ மா.அன்பழகன் பரிசளிக்கிறார்)